உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 04, 2010

பிச்சாவரத்தில் ரூ.15 லட்சம் செலவில் புதிய படகுகள்


கிள்ளை: 

                சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் 15 லட்சம் ரூபாய் செலவில் புதிய மோட்டார் மற்றும் துடுப்பு படகுகள் வாங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் உள்ள சுற்றுலா மையத்தில் 3 மோட்டார் படகு, 29 துடுப்பு படகுகள் இருந்தது. இதனால் கோடைகாலம் துவங்கிய நிலையில் பிச்சாவரத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் படகு கிடைக்காமல் காத்திருந்தனர். சுற்றுலா பயணிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து சுற்றுலா வளர்ச்சித்துறை மூலம் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் தலா 3 மோட்டார் படகுகள், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் 6 துடுப்பு படகுகள் கூடுதலாக வாங்கப்பட் டுள்ளது. தற்போது வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர துவங்கியுள்ளனர். வெளி மாநில சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் கூடுதல் தங்கும் விடுதி அமைக்க சுற்றுலாத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior