உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 04, 2010

இலவச மனைப்பட்டா வேண்டும்: இசை கலைஞர்கள் வேண்டுகோள்

 கடலூர்: 

                இசை கலைஞர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என மேடை மெல்லிசை கலைஞர்கள் நல சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. கடலூர் மாவட்ட மேடை மெல்லிசை கலைஞர்கள் நல சங்க பொதுக் குழு கூட்டம் கடலூரில் நடந்தது. தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சண்முகம் வரவேற்றார். கண்ணன், செயலாளர் சிவக்குமார் முன் னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., பன்னீர்செல்வம், மோசஸ், தயாநிதி, மாசிலாமணி, சிங்காரம், சார்லஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண் டும். அமைப்பு சாரா வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். உறுப்பினர்கள் அனைவரையும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். சங்கம் சார்பில் 6 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்த வேண்டும். வீடு இல்லாத உறுப்பினர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior