உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 04, 2010

கடலூர் மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தை பஸ் நிலையம் அருகே மாற்ற கோரிக்கை


மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மாற்றுத் திறனாளிகள்
கடலூர்:

                 கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை,​​ பஸ் நிலையத்துக்கு ​ அருகே மாற்ற வேண்டும் என்று,​​ கடலூர் மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்றச் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இச்சங்கத்தின் தலைவர் சி.கே.சந்தோஷ்,​​ செயலர் மனோகர்,​​ பொருளர் செந்தில்ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் மாற்றுத் திறனாளிகள் சிலருடன் வந்து,​​ திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:

                 வெளியூர்களில் இருந்து கடலூர் வரும் மாற்றுத் திறனாளிகள்,​​ மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு எளிதாகச் சென்று அலுவலர்களைச் சநதிக்க ஏதுவாக,​​ மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை பஸ் நிலையத்துக்கு அருகே மாற்ற வேண்டும்.​ மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் குடிக்கத் தண்ணீர் வைக்க வேண்டும்.மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிகளில் ஜாமீன் இன்றி கடன் வழங்க வேண்டும்.​ மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியில் இருந்து,​​ சாதிவேறுபாடு பார்க்காமல்,​​ மாதம் ஒரு மாற்றுத் திறனாளிக்கு தொழில் தொடங்க நிதி உதவி செய்ய வேண்டும். திருமண உவித்தொகை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் நிதி வழங்க வேண்டும்.​ ஊரக வேலை உறுதித் திட்டத்தில்,​​ கணக்கு எழுதும் பணி மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior