உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 14, 2010

வாகன உரிமையாளர்களிடம் ரூ.19 லட்​சம் சாலை​வரி வசூல்

கட​லூர்:

                 புதுவை மாநி​லத்​தில் பதிவு செய்து விட்டு கட​லூர் மாவட்​டத்​தில் சாலை​வரி செலுத்​தா​மல் இயக்​கிய போது பிடி​பட்ட வாக​னங்​க​ளின் உரிமையாளர்​க​ளி​டம் இருந்து,​​ கடந்த 5 நாள்​க​ளில் ரூ.​ 19 லட்​சம் சாலை வரி வசூலிக்கப்பட்டு இருப்​ப​தாக வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்து அதி​காரி ​ ஜெயக்​கு​மார் தெரி​வித்தார்.​ ​பு​துவை மாநி​லத்​தில் விற்​பனை வரி மிகக்​கு​றை​வாக இருப்​பதால்,​​ புதுவை மாநி​லத்​தை​யொட்டி உள்ள கட​லூர்,​​ விழுப்​பு​ரம்,​​ நாகை,​​ தஞ்சை,​​ திரு​வா​ரூர் மாவட்​டங்​க​ளைச் சேர்ந்​தோர் இரு சக்​கர வாக​னங்​கள் மற்​றும் 4 சக்​கர வாக​னங்​களை புதுவை மாநி​லத்​தில் வாங்​கு​கின்​ற​னர்.​

                   சாலை​வ​ரி​யும் அங்கு மிகக்​கு​றைவு என்​ப​தால்,​போலி முக​வரி அளித்து அங்​கேயே வாக​னப் பதி​வும் செய்து கொள்​கின்​ற​னர்.​ அவ்​வாறு பதிவு செய்​யப்​ப​டும் வாக​னங்​கள் தமி​ழ​கத்​துக்​குள் இயக்​கப்​ப​டும் போது,​​ சாலை வரி வித்​தி​யா​சத் தொகையை தமி​ழக அர​சுக்​குத் செலுத்த வேண்​டும்.​ இத் தொகை​யைச் செலுத்​தா​மல் பலர்,​​ வரி​ஏய்ப்பு செய்​வ​தால் தமி​ழக அர​சுக்கு ஆன்​டு​தோ​றும் பல கோடி வரு​வாய் இழப்பு ஏற்​ப​டு​கி​றது.​ இதில் 4 சக்​கர வாக​னங்​க​ளின் வரி ஏய்ப்பு அதி​க​மாக உள்​ளது.​ ​இது குறித்து புகார்​கள் எழுந்​த​தன் விளை​வாக புதுவை மாநி​லத்​தில் பதிவு செய்து,​​ கட​லூர் மாவட்​டத்​தில் சாலை வரி செலுத்​தாத இரு​சக்​கர வாக​னங்​களை,​​ கடந்த சில நாள்​க​ளாக போக்​கு​வ​ரத்​துத் துறை அதி​கா​ரி​கள் ஆய்வு செய்து வித்​தி​யாச வரியை செலுத்​து​மாறு அறி​வு​றுத்தி வரு​கி​றார்​கள்.​ ​தொ​டர்ந்து வரி​செ​லுத்​தாத வாக​னங்​கள் கைப்​பற்​றப்​பட்டு வரு​கி​றது.​ கடந்த 5 நாள்​க​ளில் மட்​டும் சாலை​வரி வித்​தி​யா​சத் தொகை​யாக,​​ 634 வாக​னங்​க​ளுக்கு,​​ ரூ.​ 19.3 லட்​சம் வசூ​லித்து இருப்​ப​தாக வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்து அதி​காரி ஜெயக்​கு​மார் தெரி​வித்​தார்.​ ​

அ​வர் மேலும் கூறி​யது:​ 

                புதுச்​சேரி மாநி​லத்​துக்கு வரி​செ​லுத்​தி​விட்டு,​​ தமி​ழ​கச் சாலை​க​ளைப் பயன்​ப​டுத்​து​வது தவ​றான செயல்.​ சாலை​வரி வித்​தி​யா​சத் தொகையை பலரும் தாமாக முன்​வந்து,​​ செலுத்​தத் தொடங்கி இருக்​கி​றார்​கள்.​ போக்​கு​வ​ரத்து அலு​வ​ல​கங்​க​ளில் இத​னால் கூட்ட நெரி​சல் அதி​க​ரித்து இருப்​ப​தால்,​​ சிறப்​புக் கவுன்ட்​டர்​கள் திறக்​கப்​பட்டு உள்​ளன என்​றும் தெரி​வித்​தார்.​ ​​ அடுத்​தக் கட்​ட​மாக சாலை​வரி வித்​தி​யா​சத் தொகையை செலுத்​தாத 4 சக்​கர வாகனங்களைப் பிடிக்க அதி​கா​ரி​கள் திட்​ட​மிட்டு உள்​ள​னர்.​ 4 சக்​கர வாகனங்களைப் பிடிப்​பது அதி​கா​ரி​க​ளுக்கு சவா​லாக இருக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​ப​டு​கி​றது.​ ஏ​னெ​னில் உயர் அதி​கா​ரி​கள்,​​ வணி​கர்​கள் என ​ சமு​தா​யத்​தில் உயர்ந்த அந்​தஸ்​தில் இருக்​கும் பலர் இவ்​வாறு தமி​ழ​கத்​தில் சாலை​வரி செலுத்​தா​மல் வரி ஏய்ப்பு செய்து வரு​கி​றார்​கள்.​ க​ட​லூர் திரு​வந்​தி​பு​ரம் சாலை​யில் இவ்​வாறு தமி​ழ​கத்​தில் சாலை வரி செலுத்​தாத இரு ஆம்னி வேன்​களை வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்து அலு​வ​லர் ஜெயக்​கு​மார் வியா​ழக்​கி​ழமை கைப்பற்றினார்.​ அ​வற்​றில் ஆவ​ணங்​கள் முறை​யாக இல்லை.​ எனவே காவல் நிலை​யத்​தில் அவை​கள் ஒப்​ப​டைக்​கப்பட்டு உள்​ளன.​ மது​பா​னங்​கள் கடத்​த​லுக்கு பெரும்​பா​லும் புதுவை மாநி​லப் பதிவு வாக​னங்​களே பயன்​ப​டுத்​தப் படு​வ​தாக போலீ​ஸôர் தெரி​வித்​த​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior