உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 14, 2010

விருத்தாசலத்தில் பதுக்கி வைத்திருந்த ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

விருத்தாசலம் : 

                  விருத்தாசலம் பகுதியில் விதிமுறைகளை மீறி பதுக்கி வைத்திருந்த ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டை பகுதியில் செராமிக் தொழில் செய்பவர்கள் விதிமுறைகளை மீறி மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் மாவட்ட வழங்கல் அதிகாரி தேவராஜன் தலைமையில் பறக்கும்படை தாசில்தார் கண்ணன், டி.எஸ்.ஓ., செழியன், ஆர்.ஐ., ராஜ்குமார், வி.ஏ.ஓ., ராஜேஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தொழிற்பேட்டை பகுதியில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது செராமிக் தொழில் செய்பவர்கள் பலர் பதுக்கி வைத்திருந்த ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior