உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 14, 2010

கட​லூர் மாவட்​டத்​தில் 29,528 மாண​வர்​க​ளுக்கு இன்று பிளஸ்-​2 தேர்வு முடிவு

கட​லூர்:
 
                பிளஸ்-​2 தேர்வு முடி​வு​கள் வெள்​ளிக்​கி​ழமை ​(இன்று)​ காலை வெளி​யிடப்​ப​டு​கி​றது.​ கட​லூர் மாவட்​டத்​தில் 29,528 மாணவ,​​ மாண​வி​கள் தேர்வு முடிவு​களை எதிர்​பார்த்​துக் காத்​தி​ருக்​கி​றார்​கள்.​மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடை​பெற்ற பிளஸ்-​2 தேர்வை,​​ தமி​ழ​கம் மற்​றும் புது​வை​யில் 6,89,687 மாணவ,​​ மாண​வி​யர் எழு​தி​னர்.​ ​க​ட​லூர் மாவட்​டத்​தில் மாண​வர்​கள் 14,679 பேரும் மாண​வி​கள் 14,849 பேரும் பிளஸ்-​2 தேர்வு எழுதி இருக்​கி​றார்​கள்.​      
 
            பிளஸ்-​2 தேர்வு முடி​வு​கள் காலை 9 மணிக்கு முத​லில் சென்​னை​யில் வெளி​யி​டப்​ப​டு​கி​றது.​அதே நேரத்​தில் கட​லூர் மாவட்ட மாண​வர்​க​ளுக்​கான தேர்வு முடி​வு​கள் கட​லூர் புனித அன்​னாள் மேல்​நி​லைப் பள்​ளி​யில் வெளியிடப் படு​கி​றது.​  தேர்வு முடி​வு​களை மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​லர் அமு​த​வல்லி வெளி​யி​டு​கி​றார்.​ ​​   இதற்​காக விரி​வான ஏற்​பா​டு​களை மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​ல​கம் செய்து உள்​ளது.​    தேர்வு முடி​வு​க​ளைப் பெற்​றுச் செல்​வ​தற்​காக அனைத்து மேல்​நி​லைப் பள்ளி தலைமை ஆசி​ரி​யர்​க​ளும் கட​லூ​ருக்கு வர​வ​ழைக்​கப்​பட்டு உள்​ள​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior