உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 14, 2010

நட​ரா​ஜர் கோயில் உண்​டியலில் ரூ.4.17 லட்​சம் காணிக்கை

சிதம்​ப​ரம்:

                       சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயி​லில் 7-வது முறை​யாக உண்​டி​யல் வியாழக்​கி​ழமை திறந்து எண்​ணப்​பட்​ட​தில் ரூ.4 லட்​சத்து 17 ஆயி​ரத்து 486 காணிக்​கை​யாக கிடைத்​துள்​ளது.​ ​ந​ட​ரா​ஜர் கோயிலை உயர் நீதி​மன்ற ஆணைப்​படி இந்து அற​நி​லை​யத்​துறை கடந்த ஆண்டு பிப்​ர​வரி 2-ம் தேதி கைய​கப்​ப​டுத்தி நிர்​வாக அலு​வ​லரை நிய​மித்​தது.​ ​2009-ம் ஆண்டு பிப்​ர​வரி 5-ம் தேதி சித்​சபை எதிரே முதன்​மு​த​லாக கோயி​லில் உண்​டி​யல் வைக்​கப்​பட்​டது.​ அதன்​பின்​னர் படிப்​ப​டி​யாக மொத்​தம் 9 உண்​டி​யல்​கள் வைக்​கப்​பட்​டன.​ ​இந்து அற​நி​லை​யத்​துறை இணை ஆணை​யர் ஆர்.ஜகந்​நா​தன்,​​ செயல்​அ​லு​வ​லர் க.சிவக்​கு​மார் ஆகி​யோர் முன்​னி​லை​யில் 7-வது முறை​யாக உண்​டி​யல் எண்​ணப்​பட்​டது.​÷இந்​ தி​யன் ஓவர்​சீஸ் வங்கி ஊழி​யர்​கள் மற்​றும் அற​நி​லை​யத்​துறை ஊழி​யர்​கள் இப் பணி​யில் ஈடு​பட்​ட​னர்.​ சப்-​இன்ஸ்​பெக்​டர்​கள் கண்​ணு​சாமி,​​ வசந்​த​கு​மாரி ஆகி​யோர் தலை​மை​யில் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டி​ருந்​தது.​ ​÷ந​ட​ரா​ஜர் கோயி​லின் 9 உண்​டி​யல்​கள் எண்​ணப்​பட்​ட​தில் ரூ.4 லட்​சத்து 17 ஆயி​ரத்து 251 கிடைத்​தது.​ உண்​டி​யல் வைக்​கப்​பட்டு 1 வரு​டம் 2 மாதத்​தில் இது​வரை 7 முறை உண்​டி​யல் எண்​ணி​ய​தில் மொத்​தம் ரூ.21 லட்​சத்து 20 ஆயி​ரத்து 486 கிடைத்​துள்​ளது என செயல்​அ​லு​வ​லர் க.சிவக்​கு​மார் தெரி​வித்​தார்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior