உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 14, 2010

கடலூர் மாவட்டத்தில் 82 சுய​நி​திப் பள்​ளி​க​ளுக்கு கல்​விக் கட்​டண விவரம் வெளியீடு

கட​லூர்:

                 நீதி​பதி கோவிந்​த​ராஜ் தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட குழு​வின் பரிந்​துரைப்​படி,​​ சுய​நி​திப் பள்​ளி​க​ளுக்கு நிர்​ண​யிக்​கப்​பட்ட கல்​விக் கட்​டண அறிக்​கை​களை,​​ கட​லூர் மாவட்​டத்​தில் இது​வரை 82 பள்​ளி​கள் பெற்​றுச் சென்றுள்ளன.​ த​னி​யார் சுய​நி​திப் பள்​ளி​கள்,​​ மெட்​ரிக் பள்​ளி​கள் மாண​வர்​க​ளி​டம் அப​ரி​மி​த​மான கட்​ட​ணம் வசூ​லிப்​ப​தாக புகார்​கள் எழுந்​துள்​ளன.​ ​

               த​னி​யார் சுய​நி​திப் பள்​ளி​க​ளில் கட்​ட​ணம் வசூ​லிப்​பதை முறைப்​ப​டுத்த தமி​ழக அரசு சட்​டம் இயற்றி இருக்​கி​றது.​ இந்​தச் சட்​டம் செல்​லும் என்று உச்ச நீதி​மன்​றம் அண்​மை​யில் தீர்ப்பு அளித்​துள்​ளது.​இந்த நிலை​யில் நீதி​பதி கோவிந்​த​ராஜ் குழு​வின் பரிந்​து​ரைப்​படி,​​ ஒவ்​வொரு பள்​ளி​க​ளும் எவ்​வ​ளவு கட்​ட​ணம் வசூ​லிக்​க​லாம் என்று நிர்​ண​யம் செய்​யப்​பட்ட அறிக்​கை​கள் பள்​ளி​க​ளுக்கு சம்​பந்​தப்​பட்ட மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​ல​கங்​கள் மூலம் விநி​யோ​கிக்​கப்​பட்டு வரு​கி​றது.​ ​ ​

              க​ட​லூர் மாவட்​டத்​தில் 112 சுய​நி​திப் பள்​ளி​கள் உள்​ளன.​ இவற்​றில் 90 பள்​ளி​க​ளுக்கு கட்​ட​ணப் பரிந்​து​ரைப் பட்​டி​யல் மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​ல​கத்​துக்கு வந​துள்​ளது.​ இவற்​றில் 82 பள்ளி நிர்​வா​கங்​கள் வியா​ழக்​கி​ழமை வரை,​​ கட்​ட​ணப் பட்​டி​ய​லைப் பெற்​றுச் சென்​றுள்​ள​தாக அதி​கா​ரி​கள் வட்​டா​ரங்​கள் தெரி​விக்​கின்​றன.​ ​கட்​ட​ணப் பட்​டி​யலை இது​வரை வாங்​கா​மல் இருக்​கும் பள்​ளி​கள்,​​ நகர்ப் புறங்​க​ளில் உள்ள மிகப் பிர​ப​ல​மான பள்​ளி​கள்​தான் என்று கூறப்​ப​டு​கி​றது.​ பி​ர​ப​ல​மான பள்​ளி​கள் பல,​​ தாங்​கள் வசூ​லிக்​கும் கட்​ட​ணத்தை குறைத்​தும்,​​ ஆசி​ரி​யர்​க​ளுக்கு வழங்​கப்​ப​டும் ஊதி​யத்தை உயர்த்​தி​யும் தக​வல்​களை அளித்து உள்​ளன.​     இந்​தக் கட்​ட​ணத்​தில் பள்ளி சிறப்​பாக நடப்​ப​தால்,​​ அதேக் கட்​ட​ணத்தை தொடர்ந்து வசூ​லிக்​க​லாம் என்று நீதி​பதி கோவிந்​த​ராஜ் குழு பரிந்​து​ரைத்து உள்​ளது.​ ​

                இவ்​வாறு 25 சத​வீத பள்ளி நிர்​வா​கங்​கள்,​​ தாங்​கள் வசூ​லிக்​கும் கட்​ட​ணத்தை குறைத்​துக் காண்​பித்​த​தால்,​​ அதேக் கட்​ட​ணத்தை வசூ​லிக்க வேண்​டிய கட்​டா​யத்​தில் மாட்​டிக் கொண்​ட​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ ​கி​ரா​மப்​புற நர்​சரி பள்​ளி​கள் பல​வற்​றுக்கு அவர்​கள் தற்​போது வசூ​லிக்​கும் கட்​ட​ணத்​தை​விட,​​ கூடு​தல் கட்​ட​ணம் வசூ​லிக்க நீதி​பதி குழு பரிந்​து​ரைத்து இருப்​ப​தா​க​வும் கூறப்​படு​கி​றது. 20 சத​வீத பள்​ளி​க​ளுக்கு அவர்​கள் தற்​போது வசூ​லிக்​கும் கட்​ட​ணத்தையே நீதி​பதி குழு பரிந்​து​ரைத்து உள்​ளது.​ மொத்​தத்​தில் 50 சதத்​துக்​கும் மேற்பட்ட பள்ளி நிர்​வா​கங்​கள்,​​ நீதி​பதி கோவிந்​த​ராஜ் குழு​வின் பரிந்​து​ரைக் கட்டண விகி​தத்தை,​​ முழு​ம​ன​து​டன் ஏற்​றுக் கொண்டு இருப்​ப​தாக ​கல்​வித் துறை அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior