உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 14, 2010

ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக விருப்பம்: +2 முதல் மாணவன்

             பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த தூத்துக்குடி மாணவர் பாண்டியன் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக விருப்பம் தெரிவித்துள்ளார். பாண்டியனின் தந்தை ராஜீவ் நெடுஞ்சாலைத் துறையில் இளநிலை பொறியாளராகவும், தாயார் சாந்தி ஆசிரியையாகவும் பணியாற்றுகின்றனர். மாணவர் பாண்டியன் மிகவும் அமைதியானவர் என்றும், அவரைப் படிக்கும்படி தாங்கள் எப்போதும் கட்டாயப்படுத்தியதில்லை என்றும் அவரது பெற்றோர் தெரிவித்தனர். பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்ஸ் எஞ்சினியரிங் படித்துவிட்டு பின்னர் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பதே தமது விருப்பம் என மாணவர் பாண்டியன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior