உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 14, 2010

கடலூ​ரில் அட்​சய திரி​தியை விழிப்​பு​ணர்வு பிர​சா​ரம்

கட​லூர்:

               அட்​சய திரி​தியை அன்று மக்​கள் எச்​ச​ரிக்​கை​யு​டன் தங்க நகை​களை வாங்க வேண்​டும் என்று வலி​யு​றுத்தி,​​ தமிழ்​நாடு நுகர்​வோர் கூட்​ட​மைப்பு சார்பில் விழிப்​பு​ணர்​வுப் பிர​சா​ரம் வியா​ழக்​கி​ழமை மேற்​கொள்​ளப்​பட்​டது.​   கடலூர் பஸ்​நி​லை​யம்,​​ நகைக் கடை​கள் நிறைந்த லாரன்ஸ் சாலை,​​ மஞ்சக்குப்பம் கடை​வீதி ஆகிய இடங்​க​ளில் இந்​தப் பிர​சா​ரம் நடந்​தது.​ ​ ​ அட்​சய திரி​தியை தினத்​தில் தங்​கம் வாங்​கி​னால் ஐஸ்​வர்​யம் பெரு​கும்,​​ எல்லா நலன்​க​ளும் கிடைக்​கும் என்ற நம்​பிக்கை மக்​கள் மத்​தி​யில் நிலவி வரு​கி​றது.​ ​   இந்​தச் சந்​தர்ப்​பத்​தைப் பயன்​ப​டுத்தி,​​ நேர்​மை​யற்ற வணிக நடை​மு​றை​க​ளைக் கையா​ளும் வணி​கர்​கள் சிலர்,​​ தரம் குறைந்த தங்​கத்தை ஏமாந்​த​வர்​க​ளி​டம் விற்​பனை செய்​து​வி​டும் நிலையை,​​ மக்​க​ளுக்கு எடுத்​துக்​கூற விழிப்​பு​ணர்​வுப் பிர​சா​ரம் கடலூ​ரில் நடை​பெற்​றது.​ ​​   

                  தமிழ்​நாடு நுகர்​வோர் கூட்​ட​மைப்​பைச் சேர்ந்​த​வர்​கள்,​​ இந்த விழிப்புணர்​வுப் பிர​சா​ரத்தை மேற்​கொண்​ட​னர்.​    விளம்​ப​ரங்​களை நம்பி ஏமாறா​தீர்​கள்,​​ கூட்ட நெரிச​லில் குறை​யுள்ள நகை​களை வாங்கி விடா​தீர்​கள்.​   த​ரத்​தைப் பாருங்​கள்,​​ ஹால்​மார்க் தர நிர்​ண​யத்​தி​லும் தரம் குறைவு உண்டு,​​ கண்​டிப்​பாக அச்​சிட்ட ரசீது வாங்​குங்​கள்,​​ கஷ்​டப்​பட்டு சம்​பா​தித்த பணத்தை நல்ல நகை​க​ளில் முத​லீடு செய்​யுங்​கள் என்ற கோஷங்​க​ளு​டன்,​​ துண்​டுப் பிர​சு​ரங்​களை மக்​க​ளி​டையே விநி​யோ​கித்​த​னர்.​ ​  த​மிழ்​நாடு நுகர்​வோர் கூட்​ட​மைப்​பின் பொதுச் செய​லா​ளர் எம்.நிஜா​மு​தீன் தலைமை தாங்​கி​னார்.     இதில் நுகர்​வோர் அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​கள்,​​ நுகர்​வோர் ஆர்​வ​லர்​கள் அருள்​செல்​வம்,​​ வட​லூர் வேம்பு,​​ நெல்​லிக்​குப்​பம் பால​சுப்​பி​ர​ம​ணி​யன்,​​ ராம​நா​தன்,​​ சிவ​சங்​கர்,​​ பர​சு​ரா​மன்,​​ அமிர்த​லிங்​கம்,​​ புக​ழேந்தி,​​ பாபு,​​ பாலா,​​ நட​ரா​ஜன் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​ட​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior