உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 14, 2010

தாக்குதல்: ஊராட்​சித் தலை​வ​ரின் மகன்​கள் கைது

கட ​லூர்:

              தேசிய ஊரக வேலை உறு​தித் திட்​டத்​தில் போலி​யாக கூடு​தல் ஆள்களைச் சேர்க்க மறுத்த மக்​கள் நலப்​ப​ணி​யா​ளர் தாக்​கப்​பட்​டார்.​ இது தொடர்​பாக ஊராட்சி மன்​றத் தலை​வ​ரின் மகன்​கள் இரு​வர் கைது செய்​யப்​பட்ட​னர்.​ ​

                நெல்​லிக்​குப்​பம் அருகே எழு​மேடு கிரா​மத்​தில் தேசிய ஊரக வேலை உறு​தித் திட்​டத்​தில்,​​ வாய்க்​கால் தூர்​வா​ரும் பணி நடை​பெற்று வரு​கி​றது.​ மக்​கள் நலப்​ப​ணி​யா​ளர் கட​வுள் குமார்,​​ புதன்​கி​ழமை அப் பணி​யில் கணக்​கெ​டுத்​துக் கொண்டு இருந்​தார்.​ ​அப்​போது அங்கு எழு​மேடு ஊராட்சி மன்​றத் தலை​வர் அபூர்​வத்​தின் மகன்​க​ளான சக்​தி​வேல்,​​ புரு​சோத்​த​மன் ஆகி​யோர் வந்​த​ன​ராம்.​ ​ஊ​ராட்சி மன்​றத் தேர்த​லில் அவர்​கள் அதி​கம் செலவு செய்து விட்​ட​தா​க​வும்,​​ அதை சரி​கட்ட வாய்க்​கால் தூர்​வா​ரும் பணி​யில் வேலை செய்த ஆள்​க​ளை​விட,​​ கூடு​த​லாக 50 பேரை போலி​யா​கச் சேர்த்து,​​ அதற்​கான பணத்தை தங்களிடம் வழங்க வேண்​டும் என்று கோரி​ன​ராம்.​ ​ இ​தற்கு கட​வுள் குமார் சம்​ம​திக்கவில்​லை​யாம்.​ எனவே அவரை சக்​தி​வேல்,​​ புரு​சோத்​த​மன் ஆகி​யோர் தாக்கியதா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ இதைத் தொடர்ந்அங்கு வேலை செய்த ஆள்​கள்,​நெல்லிக்​குப்​பம் காவல் நிலை​யம் வந்து புகார் செய்​த​னர்.​ போ​லீ​ஸôர் வழக்​குப் பதிவு செய்து,​​ சக்​தி​வேல்,​​ புரு​சோத்​த​மன் ஆகி​யோ​ரை கைது செய்​த​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior