உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 03, 2010

ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு : பரங்கிப்பேட்டையில் தொடரும் சம்பவம்


கடலூர் : 

                  வீடு புகுந்து 4.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

                  பரங்கிப்பேட்டை பெரிய ஆசானகான தெருவைச் சேர்ந்தவர் ரிஜாயத் அலி. நேற்று இரவு 8 மணிக்கு இவரது வீட்டில் இருந்தவர்கள் பக்கத்து தெருவில் உள்ள தெரிந்தவரின் வீட்டிற்கு சென்றிருந்தனர். ரிஜாயத் அலி மட்டும் வீட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் வீட் டில் புகுந்து அறையில் இருந்த சாவியை எடுத்து பிரோவைத் திறந்து 25 பவுன் நகைகளை திருடிக் கொண்டிருந்தனர்.

                      குளித்துவிட்டு வந்த ரிஜாயத் அலி உள்ளே மர்ம ஆசாமிகள் இருப்பது தெரியாமலேயே உடையை மாற்றிக்குக் கொண்டு வெளியே சென்று விட்டார். சற்று நேரத்தில் பக்கத்து தெருவிற்கு சென்ற ரிஜாயத் அலி மனைவி மற்றும் மருமகள் வீட்டிற்கு வந்த போது, கதவு சாத்தப்பட்டிருந்தது. வீட்டிலிருந்து சத்தம் கேட்கவே, உள்ளே சென்றனர். அப்போது மர்ம ஆசாமிகள் வீட்டில் மின் இணைப்பை துண்டித்து விட்டு பின்பக்க கதவை திறந்து கொண்டு தப்பியேடினர். வீட்டினுள் சென்று பார்த்தபோது பிரோ திறந்து கிடந்ததையும், அதிலிருந்த இருந்த 35 பவுன் நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். திருடு போன நகைகளின் மதிப்பு 4.50 லட்சம் ரூபாயாகும்.
இதுகுறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார். பரங்கிப்பேட்டையில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இது வரை எந்த சம்பவத்திலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. மேலும் நேற்று நடந்த இந்த சம்பவம் பரங்கிப்பேட்டை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior