உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 03, 2010

வேப்பூரில் பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பு


சிறுபாக்கம் : 

                 வேப்பூர் பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

                திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான பெரியநெசலூர், சேப்பாக்கம், நல்லூர், நிராமணி, கண்டப்பங்குறிச்சி, பூலாம் பாடி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெருமளவு பி.எஸ். என்.எல்., சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு அவசர ஆம்புலன்ஸ் 108, போலீஸ் ஸ்டேஷன் 100, தீயணைப்பு நிலையம் 101 ஆகியன இலவச எண் இணைப்புகளை தொடர்பு கொண்டால் 'உபயோகத்தில் இல்லை, மீண்டும் சரிபார்க்க' வேண்டுமென என பதில் வருகிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இதே நிலை நீடித்து வருவதால் அடிக்கடி நெடுஞ்சாலையில் நிகழும் விபத்து குறித்து கூட அவசர எண்ணிற்கு தகவல் தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் ஏழை, எளிய கிராம மக்கள் தீ விபத்து, ஆம்புலன்ஸ், போலீஸ் சேவையை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்துள்ளனர். வேப்பூர் பகுதிகளில் குறிப்பிட்ட இலவச சேவை எண்கள் பழுதானதை பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் தனிக்கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior