உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 03, 2010

கடலூரில் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்


கடலூர் :

             தமிழகம் மற்றும் கடலூர் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் சார்பில் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு கருத்தரங்கம் நடந்தது.

               கடலூர் கே.டி.ஆர்., ஓட்டலில் நடந்த கருத்தரங்கிற்கு டான்ஸ்டியா பொது செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். தலைவர் காந்தி குமார் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினர் கலெக்டர் சீத்தாராமன் சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் கடன் காப்புறுதி அறக்கட்டளை தென் மண்டல மேலாளர் முகமது ரபி, திட்டத்தில் மாற்று திட்டங்கள் குறித்து குறுந் தொழில் மற்றும் வணிகத் துறையின் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் மகாலிங்கம், மத்திய கலால் துறை கூடுதல் ஆணையர் குருநாதன், டான்ஸ்டியா சட்ட மற்றும் வரி ஆலோசகர் பார்த்தசாரதி, கடலூர் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத் தலைவர் அசோக், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் தேவன், லைன்ஸ் திருமலை ஆகியோர் பேசினர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior