உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 03, 2010

விருத்தாசலத்தில் குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல்


விருத்தாசலம் :

              விருத்தாசலம் அண்ணா நகர் பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வராததை கண்டித்து நேற்று சாலை மறியல் செய்தனர்.

                விருத்தாசலம் 13 வது வார்டு பகுதியை சேர்ந்தது அண்ணாநகர். இந்த பகுதியில் கடந்த மூன்று நாட் களாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறி, அப்பகுதி மக்கள் கோகுல கிறிஸ்டீபன் தலைமையில் காலி குடங்களுடன் கடலூர் ரோட்டில் நேற்று காலை 9.45 மணிக்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படி கூறியதைத் தொடர்ந்து மறியலை விலக்கிக் கொண்டு தாலுகா அலுவலகம் சென்றனர். அங்கு நகராட்சி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடந்தது. இன்று (நேற்று) மாலைக்குள் குடிநீர் வழங்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் சாலைமறியலால் விருத்தாசலம் - கடலூர் ரோட்டில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior