உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 03, 2010

உயர்மட்ட பாலத்திற்கு இணைப்பு சாலை போடாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி


நடுவீரப்பட்டு :

                 நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே கட்டப்பட்ட உயர் மட்ட பாலத்திற்கு இணைப்பு சாலை போடாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

              பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் கிராம சாலைகள் மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. சி.என்.பாளையத்திலிருந்து பாலத்திற்கு செல்லும் இணைப்பு சிமென்ட் ரோடு மிகவும் குறுகலாக போடுவதாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் வேலை முழுவதுமாக தடைப் பட்டது.

                     இது குறித்து நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ.,விடம் பொதுமக்கள் ரோட்டை முழுவதும் அகலப்படுத்தி தரமான சிமென்ட் சாலை போட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் அவர் அந்த இடத்தை பார்வையிட்டு சாலையை அகலப்படுத்த உத்தரவிட்டார். இதனையடுத்து ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அப்பகுதியில் இருந்த கடைகள் ஆக்கிரமிப்பு முழுவதும் அகற்றப்பட்டது. ஆனால் சாலை போடும் பணி இது வரை நடக்கவில்லை. தற்போது பாலம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இணைப்பு சாலை இது வரை போடாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். நடுவீரப்பட்டு பகுதிகளிலிருந்து இரவு நேரத்தில் வரும் வெளியூர் வாகனங்கள் கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, விடுபட்ட இணைப்பு சாலையை உடனடியாக போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior