உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 03, 2010

மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி


கடலூர் : 

                 கடலூர் அடுத்த பெரியகங்கணாங்குப்பத்தில் வீடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான செயற்கைகோள் மூலம் மூன்று கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

                கடலூர் நகராட்சி பகுதியில் உள்ள 45 வார்டுகளிலும் மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011க்கான பயிற்சி பெரியகங்கணாங்குப்பம் அனைவருக்கும் கல்வி இயக்க பயிற்சி கூடத்தில் வகுப்புகள் நடக்கிறது. முதல் இரண்டு கட்டமாக சென் னையிலிருந்து அளிக்கப்படும் பயிற்சியை பெரியகங்கணாங்குப்பத்தில் உள்ள பயிற்சி மையத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட செயற்கை கோள் ஒளிபரப்பு மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்றாம் கட்ட பயிற்சிகள் சிறப்பு பயிற்சியாளர்கள் மூலம் அளிக்கப்படுகிறது. இதில் திருவந்திபுரம் தலைமை ஆசிரியர் பழனி, திருப்பாதிரிப்புலியூர் அரசு பள்ளி முதுகலை ஆசிரியர் சசிகலா தேவி, சிங்காரவேல் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சி வகுப்புகளை நகராட்சி கமிஷனர் குமார் பார்வையிட்டார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior