உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 03, 2010

பண்ருட்டியில் ரயில் பயணிகள் நலச் சங்கம் துவக்கம்


பண்ருட்டி : 

               பண்ருட்டியில் ரயில் பயணிகள் நல சங்கம் புதியதாக துவக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் புதிய தலைவராக சண்முகம், துணை தலைவராக ஹரிஹரன், அசோக்ராஜ், செயலாளராக சீனுவாசன், இணைசெயலாளர் வீரப்பன், துணை செயலாளர் கலியபெருமாள், யாசீன், பொருளாளர் சம்பத்லால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் பண்ருட்டி வழியாக செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் இரண்டு நிமிடம் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று போக நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் நிலையம் சென்று செல்லும் சாலையில் தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். ரயில் நிலையத்திற்கு ஸ்டேஷன் மாஸ்டர் குடியிருப்பு பகுதி வழியாக மாற்று வழி உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior