உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 14, 2010

கானாவிடம் வீழ்ந்தது செர்பியா(1-0)


பந்தை தன் வசப்படுத்தும் முயற்சியில் செர்பிய வீரர் பிரானிஸ்லேவ் இவானோவிக் (இடது), கானாவின் ஆன்ட்ரே அயூவ்
பிரிடோரியா:

             உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கானா 1-0 என்ற கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது.இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் பிரிடோரியா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.முதல் பாதி ஆட்டநேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் முதல் 30 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தபோது 84-வது நிமிடத்தில் கானா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட கானா வீரர் ஆஷாமோ ஜியான் கோல் அடித்து தனது அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெறச்செய்தார். இதையடுத்து செர்பிய வீரர்கள் கோலடிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். இதனால் ஆட்டத்தின் கடைசி 6 நிமிடங்களில் பரபரப்பு தொற்றியது. கானா வீரர்கள் தடுப்பாட்டம் ஆடியே ஆட்டத்தை முடித்தனர். இறுதியில் 1-0 என்ற கணக்கில் கானா வெற்றி பெற்றது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior