உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 14, 2010

நீரில் கரையும் கரும்பு உரங்கள்100 சதவீத மானியத்தில் வழங்கல்

திட்டக்குடி; 
 
                                 நீரில் கரையும் ரசாயன உரங்கள் நூறு சதவீத மானிய விலையில் வழங்கும் விழா திட்டக்குடியில் நடந்தது. விழாவிற்கு மங்களூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாக முதுநிலை மேலாளர் (கரும்பு பிரிவு) பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். மங்களூர் துணை வட்டார வேளாண்மை அலுவலர் டென்சிங் வரவேற்றார். இதில் கரும்பு அலுவலர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர். விழாவில் 2009-10ம் ஆண்டு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயன்பெறும் சிறுபாக்கம் தாமரை கரும்பு துல்லிய பண்ணை சங்கம் மற்றும் ம.புதூர் வள்ளலார் கரும்பு துல்லிய பண்ணை சங்க விவசாயிகள் 40 பேருக்கு 100 சதவீத மானிய விலையில் கரும்பு பயிருக்கு நீரில் கரையும் ரசாயன உரங்கள் வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior