உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 14, 2010

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாக்கு அறுத்து காணிக்கை

சிதம்பரம்:

                சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாக்கை அறுத்து காணிக்கையாக செலுத்தியவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்துரு சுவாமிகள். இவர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 1400 முறை உள்பிரகாரத்திலும் வெளிபிரகாரத்திலும் அங்கபிரதட்சணம் செய்து வருகிறார்.பௌர்ணமிதோறும் தேரோடும் வீதிகளில் தொடர் அங்கபிரதட்சணம் செய்துவரும் அவர் சனிக்கிழமை இரவு திடீரென தனது நாக்கை காணிக்கை செலுத்துவதாக கூறி, கோயிலின் கருவறைக்கு எதிரே நாக்கை அறுத்து வீசினார். அங்கிருந்தவர்கள் அவரை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior