உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 14, 2010

நகை கடை உரிமையாளர்களுடன் போலீசார் கலந்தாய்வு


திட்டக்குடி: 

                   திட்டக்குடியில் நகை கடை மற்றும் அடகு கடை உரிமையாளர்களுடன் போலீசார் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., இளங்கோ தலைமை தாங் கினார். திட்டக்குடி இந்தியன் வங்கி கிளை மேலாளர் அணில்குமார், கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் கலைச் செல்வம், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் தங்கராசு முன்னிலை வகித்தனர். சப் இன்ஸ்பெக்டர் சம்பந்தம் வரவேற்றார்.

                      கூட்டத்தில் நகை மற்றும் அடகு கடைகளின் உள் மற்றும் வெளிப்புறங்களில் இரவு நேரங்களிலும் பயன்படும் வகையில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த வேண்டும். பக்லர் அலாரம், மரத்தால் செய்த பழைய கதவுகள் மாற்றி பாதுகாப்பான வகையில் கதவுகள் அமைக்கப்பட வேண்டும், எளிதில் உடைக்க முடியாத பூட்டினை பயன்படுத்தி திருட்டுகளை குறைக்க போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும் என இன்ஸ்பெக்டர் ராமதாஸ் பேசினார். கூட்டத்தில் ஜூவல்லரி உரிமையாளர் கள் அய்யப்பன், பாண்டியன், அடகு கடை உரிமையாளர்கள் செல்வம், பிரபு, சப் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, ஏட்டுகள் லோகநாதன், ராஜவேல் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior