உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 14, 2010

ரயில்வே மேம்பால பணியையொட்டி காரைக்காடு சாலையை ஒரு வழிபாதையாக மாற்ற வலியுறுத்தல்

கடலூர்: 

                  ரயில்வே மேம்பால பணியையொட்டி காரைக் காடு வழியாக செல்லும் வாகனங்கள் ஒரு வழிப்பாதையை பயன்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 
                     பச்சையாங்குப்பம் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணியினால் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. விருத் தாசலத்திற்கு செல்லும் வாகனங்கள் சிப்காட் அடுத்த காரைக்காடு வழியாக விருத்தாசலம் சாலையை சென்றடைகிறது. இதனால் காரைக்காடு கிராமத்தில் உள்ள சிறிய சாலையில் அவ் வளவு வாகனங்களும் செல்ல முடியவில்லை. பல இடங்களில் சிறு சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. டிப்பர் லாரிகள் போக்குவரத்தால் கிராமமே புழுதி நகரமாக காட்சி தருகிறது.எனவே, இந்த சாலையை ஒரு வழிச்சாலையாக பயன்படுத்துமாறு கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். விருத்தாசலத்தில் இருந்து கடலூர் வரும் வாகனங்கள் பெரிய காரைக்காடு வழியை பயன்படுத்துமாறும், கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் வாகனங்கள் காரைக்காடு சாலையை பயன்படுத்தினால் விபத்துக்கள் குறைவதோடு வாகன நெரிசலும் கனிசமாக குறையும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior