உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 14, 2010

ஆற்றில் மூழ்கிய மாணவி உடல் மீட்பு: மற்றொருவரை தேடும் பணி தீவிரம்

பரங்கிப்பேட்டை:

                     சிதம்பரம் அருகே பரவனாற்றில் குளித்த பள்ளி மாணவியர் இருவரில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. மற்றொருவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சிதம்பரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் பிரேமலதா (13). அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகள் சத்தியா (13). இருவரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தனர்.

                    நேற்று விடுமுறை நாள் என்பதால் சமையலுக்கு விறகு பொறுக்க பரவனாறு பகுதிக்குச் சென்று திரும்பி வரும் போது பரவனாற்றில் குளித்தனர். திடீரென ஆழமான பகுதியில் இருவரும் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள், இருவரையும் காப்பாற்ற முயன்று தண்ணீரில் இறங்கி தேடினர். சிறிது நேரத்தில் பிரேமலதா உடலை மட்டும் மீட்டனர். சத்தியா கிடைக்கவில்லை.இதுகுறித்து தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கிராம மக்கள் உதவியுடன் நீரில் மூழ்கிய சத்தியாவை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior