உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 14, 2010

கிள்ளையில் உலக சுற்றுச்சூழல் தின விழா

கிள்ளை:

                  சிதம்பரம் அருகே கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர் (இருளர் குடியிருப்பு) நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் விழா கொண்டாடப்பட்டது. சிதம்பரம் அருகே கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர் (இருளர் குடியிருப்பு) நடுநிலைப் பள்ளியில் நடந்த உலக சுற்றுச்சூழல் விழா, குழந்தைகள் பாராளுமன்ற அமைச்சர்கள் பொறுப்பேற்பு விழாவில் தலைமை ஆசிரியர் சிவக்குமரவேல் தலைமை தாங்கினார். உதவி ஆசிரியை சரவணாஸ்ரீ வரவேற்றார். ஆசிரியர்கள் மணிமாறன், மணிமொழி முன்னிலை வகித்தார். 15 பேர் கொண்ட குழந்தைகள் பராளுமன்றத் தில் தலைவர் அன்பரசன், செயலாளர் சதீஷ்குமார், துணை செயலாளர் அம்சவள்ளி, அமைப்பாளர் ஆனந்தி உள் ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர்களுக்கு பரங்கிப்பேட்டை ஒன்றிய கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் முத்துசுகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் நடந்த உலக சுற்றுச் சூழல் ஊர்வலத்தை அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர் மாறன் துவக்கி வைத்தார். ஏக்தா நம்பிக்கை மைய ஒங்கிணைப்பாளர் தமிழ்மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மரக்கன்றுகள் நடப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior