உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 14, 2010

நடுக்கடலில் படகு பழுது : மீனவர்கள் தத்தளிப்பு

கடலூர் : 

                       பழுதடைந்த படகில் நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க கடலோரக் காவல் படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடலூர் முதுநகர் பென்சனர் தெருவைச் சேர்ந்த மீனவர்களான சின்னவர் (எ) கஜேந்திரன் (40) மணவெளி ராஜா (48) சலங்கை நகர் ரகு (48) வசந்தராயன்பாளையம் தாஸ் (24) ஆகியோர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் தேவனாம்பட்டினம் சீத்தாராமன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

                         இந்நிலையில் நேற்று மாலை நாகை மாவட்டம் திருமுல்லைவாசல் அருகே கரைக்கு வந்த ரகு, தாங்கள் சென்ற படகு நடுக்கடலில் பழுதடைந்து விட்டதாகவும், அந்த வழியே வந்த படகில் தான் மட்டும் வந்துவிட்டதாகவும், மற்ற மூவரும் பழுதடைந்த படகிலேயே இருப்பதாக திருமுல்லைவாசல் போலீசில் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் கடலோரக் காவல் படைக்கு தகவல் கொடுத்து, பழுதடைந்த படகில் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மூவரையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior