உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 14, 2010

பாதுகாப்பற்ற நிலையில் பரங்கிப்பேட்டை கிளைச்சிறை

பரங்கிப்பேட்டை: 
 
                              பரங்கிப்பேட்டை கிளைச் சிறை மதில் சுவர் இடிந்து விழுந்து ஒரு ஆண்டு ஆகியும் கட்டப்படாமல் முள் வேலி அமைக்கப்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாஜிஸ்திரேட் கோர்ட், போலீஸ் ஸ்டேஷன், கிளைச் சிறை ஆகியவை ஒரே வளாகத்தில் கட்டப்பட்டது. இவ்வளாகத்தைச் சுற்றி பாதுகாப்புக்காக 5 அடி உயரத்திற்கு மதில் சுவர் அமைக்கப்பட்டது. இச்சிறையில் பரங்கிப்பேட்டை, புவனகிரி, புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன்களில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் அடைக்கப்படுகின்றனர். 
 
                           சிறையை சுற்றியுள்ள மதில் சுவர் பராமரிக்கப்படாததால் கடந்த ஆண்டு பின்புறம் 20 அடி நீளத்திற்கு கீழே விழுந்தது. ஒரு ஆண்டு ஆகியும் செப்பனிடப்படாமல் இருந்த நிலையில் தற்காலிகமாக முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் கைதிகள் எந்த நேரத்திலும் தப்பியோடலாம் என்ற அச்சத்தில் சிறைத்துறை அதிகாரிகள் உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior