உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 14, 2010

கடலூர் மாவட்டத்தில் கல்வி விழிப்புணர்வு ஊர்வலங்கள்

விருத்தாசலம்: 

               கடலூர், விருத்தாசலம், திட்டக்குடி, ராமநத்தம், சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி பகுதிகளில் கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
                ஐந்து வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தியும், மாணவர் சேர்க்கை அவசியம் குறித்து கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும் மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

கடலூர் துறைமுகம்: 

              பிரான் சிஸ் சவேரியர் நடுநிலைப் பள்ளியில் கிராம கல்விக்குழு தலைவர் தங்கமணி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அகஸ்டின் வரவேற்றார். தமிழரசன் துவக்கி வைத்தார்.

பண்ருட்டி: 

               அரசு மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் வடிவேல் துவக்கி வைத் தார். வட்டார வள மைய பயிற்றுநர் பண்டரிபாய் முன்னிலை வகித்தார். முதுகலை ஆசிரியர் தீனதயாளன், பற்குணன் பங்கேற்றனர்.

புதுப்பேட்டை: 

                நகராட்சி நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜாக்கண்ணு தலைமை தாங்கினார். பாலசுப்ரமணியன், சம்சுதீன், சண்முகம் பங்கேற்றனர்.

சி.என்.பாளையம்:

                      சி.என்.பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை மல்லிகா துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார்.
ராமநத்தம்: 

              ஆ.பாளையம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் வளர்ச்சிக்குழு தலைவர் கருப்புசாமி தலைமை தாங்கினார். கிராம கல்விக்குழு தலைவர் ராமசாமி, தலைமை ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார். மங்களூர் வட்டார ஆசிரியர் பயிற்றுனர் சரஸ்வதி துவக்கி வைத்தார்.

வாகையூர்: 

               ஊராட்சி தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமை தாங்கினார். கிராம கல்விக்குழு தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் மலர் செல்வன் வரவேற்றார். முன்னாள் மங்களூர் ஒன்றியக்குழு தலைவர் இளங்கோவன் துவக்கி வைத்தார்.

விருத்தாசலம்: 

                வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜம்புலிங்கம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பிரகாசம், உதவி தலைமை ஆசிரியர்கள் வீரராகவன், ராஜன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் புகழேந்தி வரவேற்றார். ஆர்.டி.ஓ., முருகேசன் துவக்கி வைத்தார்.

ராஜேந்திரப்பட்டினம்: 

               நடுநிலை பள்ளியில் ஊராட்சி தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் வெங்கடேசன், சிவக்குமார், பழனிவேல், கிரிஜா பங்கேற்றனர்.

செம்பளக்குறிச்சி: 

               நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் சதாசிவம் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் வள்ளி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இருப்புகுறிச்சி: 

              தூய இருதய மேல்நிலை பள்ளியில் மாவட்ட துணை சேர்மன் பிரான்சிஸ்மேரி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் நிர்மல்ராஜ், தசமன், அந்தோணிசாமி பங்கேற்றனர்.

சேத்தியாத்தோப்பு: 

              காவாலக் குடியில் ஊராட்சி தலைவர் தனலட்சுமி தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் (பொறுப்பு) இளஞ்செழியன் துவக்கி வைத்தார்.
திட்டக்குடி: 

             போத்திரமங்கலம் நடுநிலைப் பள்ளியில் கிராம கல்விக்குழு தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுனர் புனிதா வரவேற்றார். தலைமை ஆசிரியர் சவுரிராஜன் துவக்கி வைத்தார்.

ஈ.கீரனூர்: 

                தொடக்கப் பள்ளியில் ஊராட்சி தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தங்கதுரை, தேவேந்திரன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் தமிழ்க்கனி வரவேற்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior