உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 09, 2010

கடலூரில் செவ்வாய்க்கிழமை போலீசார் நடத்திய திடீர் சோதனையில்2 ஆயிரம் திருட்டு சி.டி.க்கள் பறிமுதல்

கடலூர்:

                  கடலூரில் செவ்வாய்க்கிழமை போலீசார்  நடத்திய திடீர் சோதனையில் 2 ஆயிரம் புதிய திரைப்பட திருட்டு சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின்பேரில், கடலூர் டெல்டா போலீஸ் உதவி ஆய்வாளர் அம்பேத்கர், திருப்பாப்புலியூர் உதவி ஆய்வாளர் ஆனந்த பாபு ஆகியோர் திருப்பாப்புலியூர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சி.டி. விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

                   இதில் புதிதாக வெளிவந்துள்ள சுறா, இரும்புக் கோட்டை முரட்டுச்சிங்கம், சிங்கம், கோரிப்பாளையம், குற்றப்பிரிவு, மாஞ்சாவேலு உள்ளிட்ட திரைப்படங்களின் திருட்டு சி.டி.க்கள் விற்பனைக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. திருட்டு சி.டி.க்களை உருவாக்க பயன்படுத்திய கணினிகளும் கைப்பற்றப்பட்டன. இவற்றை தயாரித்து விற்பனை செய்ததாக, கடலூர் துரோபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த துரை மகன் முருகன் (40), சிவசக்தி நகர் ராமசாமி மகன் மாணிக்கம் (40), பாதிரிக்குப்பம் ராஜாராம் மகன் பெத்தபெருமாள் (45) ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior