உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 09, 2010

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விருத்தாசலம்:
                     விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை நகராட்சியினர் சனிக்கிழமை அகற்றினர். 
                        விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நடைபாதை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளால் பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுவதாக நகர்மன்ற தலைவர் முருகனுக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர் முருகன், நகர்மன்ற உறுப்பினர் அரங்க.பாலகிருஷ்ணன், துப்புரவு அலுவலர் பரமசிவம், மேற்பார்வையாளர் ராஜ்குமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பஸ் நிலையத்துக்கு சனிக்கிழமை சென்றனர். அங்கிருந்த நடைபாதை கடைகள் மற்றும் தள்ளுவண்டிகளை அப்புறப்படுத்தினர். மேலும் பஸ் நிலையத்தில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் இருக்க நகராட்சி ஊழியர்கள் இருவர் கண்காணித்து வருமாறு நகர்மன்றத் தலைவர் அறிவுறுத்தினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior