உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 09, 2010

ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் கம்ப்யூட்டரில் பதிவு: டி.ஆர்.ஓ., தகவல்

சிதம்பரம் : 

                         சிதம்பரம் ஜமாபந்தி நிறைவு நாளில் 396 பயனாளிகளுக்கு 15 லட்சத்து 31 ஆயிரத்து 726 ரூபாய் மதிப் பில் நலத்திட்ட உதவிகளை டி.ஆர்.ஓ., நடராஜன் வழங்கினார். சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, திருவக்குளம், சேத்தியாத்தோப்பு, ஒரத்தூர் ஆகிய 6 குறுவட்டங்களுக் கான ஜமாபந்தி கடந்த மாதம் 19ம் தேதி துவங்கியது. பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு துறைவாரியாக நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. ஜமாபந்தி இறுதி நாளான நேற்று முன்தினம் வரை 2,309 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 396 மனுக்கள் ஏற்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. 1,824 மனுக்கள் விசாரணையில் உள்ளது. 89 மனுக்கள் தள் ளுபடி செய்யப்பட்டது.நிறைவு விழாவிற்கு தாசில்தார் காமராஜ் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ., ராமராஜ் முன் னிலை வகித்தார். விழாவில் 396 பயனாளிகளுக்கு 15 லட்சத்து 31 ஆயிரத்து 726 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி டி.ஆர்.ஓ., நடராஜன் பேசுகையில், "பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் விவரம் முதல் முறையாக கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மனுக்கள் மீதும் விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டு வரும் 22ம் தேதி பயனாளிகளுக்கு வழங்கப்படும்' என தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior