உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 09, 2010

வேதாத்திரி மகரிஷி பாடசாலை திறப்பு

சிதம்பரம்:

                   சிதம்பரம் சிவசக்தி நகரில் வேதாத்திரி மகரிஷியின் பாடசாலையான அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

                    உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் பாடசாலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அண்ணாமலைப் பல்கலை. யோகா கல்வி மைய இயக்குநர் டாக்டர் எஸ்.விஸ்வநாதன் குத்துவிளக்கேற்றி வாழ்த்துரையாற்றினார்.  சேவா சங்க விழுப்புரம் மண்டலத் தலைவர் எம்.சீனுவாசன் வரவேற்றார். விழா ஏற்பாடுகளை மனவளக்கலை அறக்கட்டளை தலைவர் என்.ஜி.மாணிக்கம், பொறுப்பாசிரியர் ஏ.பன்னீர், செயலாளர் எம்.சீனுவாசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். தினமும் மாலை 6.30 மணி முதல் எளியமுறை குண்டலினி யோகப் பயிற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என விழாவில் அறிவிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior