உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 09, 2010

மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் நலத்திட்ட உதவி

கடலூர் : 

               கடலூரில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 63 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கலெக்டர் முகாம் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை அடங்கிய 217 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை பரிசீலனை செய்த கலெக்டர் தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வையற்ற 30 பேருக்கு 63 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior