உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 19, 2010

ல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்: கடலூரில் 27ம் தேதி துவங்குகிறது

கடலூர் : 

           மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கடலூரில் வரும் 27, 28ம் தேதி நடக்கிறது.

           மாணவ, மாணவிகளிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கமும் இணைந்து மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவில் (ஆண் மற்றும் பெண்) வரும் 27ம் தேதி தடகள போட்டிகளும், 28ம் தேதி குழுப் போட்டிகளும் நடக்கிறது.அதில் 100 மீ., 200, 400, 800, 5,000 மீ., மற்றும் நீளம் தாண்டுதல், உயரம் தாண் டுதல், குண்டு எறிதல், 110 மீட்ட தடை ஓட்டம், 4க்கு100 மீ., மற்றும் 4க்கு 400 மீ., தொடர் ஓட்டம் உள்ளிட்ட தடகள போட்டிகளும் மற் றும் கூடைப்பந்து, வாலிபால், கபடி, கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட குழுப் போட்டிகளும் நடத்தப்படுகிறது.போட்டியில் பங்கேற்பவர்கள் பிறந்த தேதி, பங் கேற்கும் விளையாட்டின் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு விளையாட்டிற்கும் தனித் தனி நுழைவு விண்ணப்பமாக 24ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
 
             போட்டிகள் காலை 7 மணிக்கு துவங்குகிறது. பங்கேற்பவர்கள் காலை 6.30 மணிக்கு அண்ணா விளையாட்டரங்கிற்கு வர வேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் ஆகஸ்ட் மாதம் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடக்கும் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்பார்கள்.இத்தகவலை மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior