உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 19, 2010

சிதம்பரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு படைப்பாற்றல் பயிற்சி முகாம்

சிதம்பரம் : 

             சிதம்பரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஏழு ஒன்றியங்களை சேர்ந்த ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி பயிற்சி முகாம் நடந்தது.

            அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், புவனகிரி, குமராட்சி, காட்டுமன்னார்கோவில், அண்ணாகிராமம் மற்றும் கடலூர் ஒன்றியங்களை சேர்ந்த ஆசிரியர் பயிற்றுனர்கள் 90 பேருக்கு எளிய படைப்பாற்றல் கல்வி பயிற்சி முகாம் சிதம்பரம் கொத்தங்குடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. குமராட்சி மேற்பார்வையாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மேற்பார்வையாளர்கள் சிவசண்முகம், குணபாரி முன்னிலை வகித்தனர். கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் மணவாள ராமானுஜம் முகாமை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கேத்தரின் ஆலோசனைகள் வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior