உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 19, 2010

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு

சிதம்பரம் :

             சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி வாகனங்களில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆவணங்களுடன் முறையாக பராமரிக்கப்படுகிறதா என மோட்டார் வாகன அதிகாரிகள் மற்றும் போலீஸ் துறையும் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் கடலூர் மோட்டார் வாகன அதிகாரி ஜெயக்குமார் தலைமையில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் காமராஜ், சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
 
                சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளிலிருந்து 145 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகிகள், பள்ளி சார்பில் வந்திருந்த பிரதிநிதிகள், டிரைவர்களுக்கு வாகனங்கள் பராமரித்தல், இயக்குதல் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior