உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 19, 2010

செம்மை நெல் சாகு​ப​டிக்கு மாற​லாமே!

செம்மை நெல் சாகு​படி முறை​யில் நாற்று நடப்​ப​டும் வயல்.​ செம்மை நெல் சாகு​ப​டி​யால் ஒரு நாற்று பல்​வேறு கிளை​க​ளாக செழித்து வளர்ந்து இருக்​கும் வயல்.

கட​லூர்:
               அகில இந்​திய அள​வில் வேளாண் உற்​பத்தி குறைந்து வரு​வ​தாக புள்ளி விவ​ரங்​கள் தெரி​விக்​கின்​றன.​ தமி​ழ​கத்​தின் பிர​தான சாகு​ப​டிப் பயிர் நெல்.​ 
               நெல் உற்​பத்​தி​யில்,​​ இந்​தி​யா​வில் 7-வது இடத்​தில் தமி​ழ​கம் உள்​ளது.​ ​ ​இந்த நிலை​யில் கிரா​மப்​புற வேலை உறு​தித்​திட்​டம் செயல்​ப​டத் தொடங்​கியதும்,​​ விவ​சாய வேலை​க​ளுக்கு ஆட்​கள் கிடைப்​பது இல்லை என்ற நிலை உரு​வாகி விட்​டது.​ எனவே விவ​சா​யம் காப்​பாற்​றப்​பட வேண்​டு​மா​னால்,​​ இயந்திர மய​மாக்​கல் மற்​றும் நவீன தொழில் நுட்​பங்​கள் மூலம் உற்​பத்​தி​யைப் பெருக்​கு​த​லைத் தவிர வேறு வழி​யில்லை.​ ​இ​யந்​தி​ரங்​க​ளைப் பயன்​ப​டுத்தி,​​ நெல் உற்​பத்​தி​யைப் பெருக்​கு​வ​தில் சாதனை ஏற்​ப​டுத்​தி​வ​ரும் திட்​டம்,​​ செம்​மை​நெல் சாகு​ப​டித் திட்​டம் ஆகும்.​ 2000க்கு முன்​னால் தென்​னாப்​பி​ரிக்கா அருகே மட​காஸ்​கர் தீவில் செயல்​ப​டுத்​தப்பட்​டது இத்​திட்​டம்.​ 
                   பின்​னர் இந்​தி​யா​வி​லும்,​​ 2003-க்குப் பின்​னர் தமி​ழ​கத்​தி​லும் இத்​திட்​டம் செயல்​ப​டுத்​தப்​ப​டு​கி​றது.​ ​பா​ரம்​ப​ரிய விவ​சா​யத்​தில் ஒரு கிலோ நெல் உற்​பத்தி செய்ய 3 ஆயி​ரம் லிட்​டர் தண்​ணீர் தேவைப்​ப​டு​கி​றது.​ வேலை ஆட்​க​ளும் அதி​கம் தேவை.​ ​உற் ​பத்​தி​யைப் பெருக்க,​​ இடு​பொ​ருள் செல​வு​க​ளைக் குறைக்க,​​ நீர்​தே​வை​யைக் குறைக்க,​​ களை​களை உர​மாக மாற்ற,​​ நுண்​ணு​யி​ரி​க​ளின் செயல்​பாட்டை அதி​க​ரிக்க,​​ தழைச்​சத்து தேவை​யைக் குறைக்க,​​ அனைத்​தும் மேலாக அதிக லாபம் அடைய செம்மை நெல் சாகு​ப​டித் திட்​டம் உத​வு​கி​றது.​ ​இத் ​திட்​டத்​தில் விதை நெல் அளவு,​​ ஏக்​க​ருக்கு 30 கிலோ​வில் இருந்து 3 கிலோ​வா​கக் குறை​கி​றது.​ ஏக்​க​ருக்கு நாற்​றங்​கால் ஒரு சென்ட் என்ற அள​வுக்​கும் நாற்​றுக்​க​ளின் வயது 30 நாளில் இருந்து 14 நாட்​க​ளா​க​வும் குறை​கி​றது.​ ​வ​ழக்​க​மான விதை​நேர்த்தி முறை​கள் பின்​பற்​றப் படு​கின்​றன.​ நடவு வய​லில் ஒரு குத்​துக்கு ஒரு நாற்று மட்​டுமே நடப்​ப​டு​கி​றது.​ 22.5 க்கு 22.5 செ.மீ.​ சது​ரத்​துக்கு ஒரு நாற்று நடப்​பட வேண்​டும்.​ இதற்​காக அள​வுச் சட்​டம் ஒன்றை வேளாண் துறையே வழங்​கு​கி​றது.​ ​இ​யந்​தி​ரம் மூல​மாகோ வேலை​ஆள்​க​ளைக் கொண்டோ நடவு செய்​ய​லாம்.​ கோனோ​வீ​டர் இயந்​தி​ரம் மூலம் களை​களை அகற்றி,​​ அங்​கேயே மடித்​துப்​போட்டு உர​மாக்​கும் உத்தி இதில் கையா​ளப்​ப​டு​கி​றது.​ ​நீர்​ம​றைய நீர் கட்டி,​​ பாசன நீர் அள​வைக் குறைக்க ஆலோ​சனை தெரி​விக்​கப்​ப​டு​கி​றது.​ குறிப்​பிட்ட பயி​ருக்கு,​​ பச்சை வண்ண அட்​டை​மூ​லம் தழைச் சத்து நிர்​ண​யிக்​கப்​ப​டு​கி​றது.​ நடப்​பட்ட ஒரு தூரில் இருந்து 60 முதல் 80 செடி​கள் வரை கிளைத்து அவற்​றில் கதிர்​கள் தோன்​று​வ​து​தான் இம்​முறை நெல் சாகு​ப​டி​யின் சிறப்பு அம்​சம்.​ ​கட​லூர் மாவட்​டத்​தில் நெல் உற்​பத்தி சரா​சரி அளவு,​​ ஏக்​க​ருக்கு 2800 கிலோ.​ தமி​ழ​கத்​தின் சரா​சரி நெல் உற்​பத்​தி​யும் அது​தான்.​ ஆனால் செம்​மை​நெல் சாகு​படி மூலம் ஏக்​க​ருக்கு 5 ஆயி​ரம் கிலோ நெல் உற்​பத்தி செய்ய முடி​யும் என்​கி​றார்​கள் வேளாண் அலு​வ​லர்​கள்.​ எனி​னும் இதன் இலக்கு ஏக்​க​ருக்கு 7 ஆயி​ரம் கிலோ என​வும் தெரி​விக்​கி​றார்​கள்.​ ​க​ டந்த 10 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக,​​ செம்மை நெல் சாகு​படி திட்​டம் விவ​சா​யி​க​ளி​டம் பெரு​ம​ள​வுக்​குப் பிர​சா​ரம் செய்​யப்​பட்டு வரு​கி​றது.​ வட்ட வாரி​யாக செயல்​முறை விளக்க வயல்​கள் அமைக்​கப்​ப​டு​கின்​றன.​ ​இத்​திட்​டத்​தைச் செயல்​ப​டுத்​தும் விவ​சா​யிக்கு,​​ ஏக்​க​ருக்கு ரூ.​ 2,700 மதிப்​புள்ள வேளாண் கரு​வி​க​ளும்,​​ ரூ.​ 700 மதிப்​புள்ள இடு​பொ​ருள்​க​ளும் இல​வ​ச​மாக வழங்​கப்​ப​டு​கி​றது.​ ஆனா​லும் இத்​திட்​டம் 35 முதல் 40 சத​வீத விவ​சா​யி​க​ளி​டம் மட்​டுமே சென்​ற​டைந்து இருப்​ப​தாக வேளாண் துறை அதி​கா​ரி​களே தெரி​விக்​கி​றார்​கள்.​ எனவே இத்​திட்​டம் மேலும் பல விவ​சா​யி​க​ளைச் சென்​ற​டைய வேண்​டும்.​
யோச​னை​கள்:​​  
திட்டம் குறித்து பாசி​முத்​தான் ஓடை விவ​சா​யி​கள் சங்​கத் தலை​வர் பி.ரவீந்​தி​ரன் தெரி​விக்​கும் ஆலோ​ச​னை​கள்:​ 
                  காவிரி டெல்டா பாச​னக் கடை​ம​டைப் பகு​தி​க​ளில் ஒற்றை நாற்​று​நடவு,​​ சற்று பின்​ன​டைவை ஏற்​ப​டுத்​து​கி​றது.​ 3 நாற்​று​கள் வரை நடு​கி​றோம்.​ கார​ணம் கடை​ம​டைப் பகு​தி​க​ளில் வயல்​க​ளில் தண்​ணீர் தேங்​கு​தைக் கட்​டு​படுத்த முடி​யாது.​ இத​னால் இயந்​தி​ரம் மூலம் நடவு சிர​ம​மா​கி​றது.​ மேலும் ஒற்றை நாற்று எளி​தில் வீணாகி விடு​கி​றது.​ ​​ நாற்று நடு​வோ​ரும் பாரம்​ப​ரிய முறை​யில்,​​ ஒப்​பந்த அடிப்​ப​டை​யில் நடவு செய்​வ​தால்,​​ அவ​சர அவ​ச​ர​மாக நடும்​போது நாற்​றுக்​க​ளின் வேர்ப்​ப​கு​தியை பெரும்​பா​லும் மடித்து நட்​டு​வி​டு​கி​றார்​கள்.​ இத​னால் முளைப்​புத் திறன் குறைந்து விடு​கி​றது.​ எனவே இத்​திட்​டத்​தில் விவ​சா​யி​க​ளுக்கு பயிற்சி அளிப்​பது போல் நாற்று நடும் பெண்​க​ளுக்​கும் சிறப்​புப் பயிற்சி அளிக்க வேண்​டும்.​ ​நி​தா​ன​மாக நாற்று நட்​டால்​தான் ஒற்றை நாற்று முறை வெற்​றி​பெ​றும்.​ எனவே நாற்று நடும் பணிக்​கான செல​வில் ஒரு பகு​தியை விவ​சா​யி​க​ளுக்கு மானி​ய​மாக அரசு வழங்​க​லாம்.​ காவிரி டெல்டா கடை​ம​டைப் பகு​தி​க​ளில் இத்​திட்​டம் வெற்றி பெற வடி​கால் வச​தியை மேம்​ப​டுத்த வேண்​டும் என்​றார் ரவீந்​தி​ரன்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior