உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 19, 2010

சிதம்பரம் அருகே திக்...திக்... பாலம் : பாராமுகமாய் நெடுஞ்சாலைத்துறை

சிதம்பரம் : 

             சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோவில் சாலையில் கான்சாகிப் வாய்க்கால் செல்லும் பெரிய மதகு பாலம் உடைந்து எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. சிதம்பரத்தில் இருந்து திருச்சி செல்லும் முக்கிய சாலையாக காட்டுமன்னார்கோவில் சாலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலையான இச்சாலை காட்டுமன்னார்கோவில், பெரம்பலூர், அரியலூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் சாலையாகவும் உள்ளது.
 
              சிதம்பரம் அடுத்த செட்டிமுட்டு என்ற இடத்தில் கான்சாகிப் வாய்க்கால் குறுக்கே கட்டப்பட்டுள்ள பெரிய மதகு பாலம் உடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மிகவும் பழமையான இப்பாலம் பழுதடைந்து பெரிய அளவில் விரிசல் விழுந்துள்ளது. முக்கிய சாலையில் உள்ள இப்பாலம் வழியாக அனைத்து விதமான இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன.மோசமான நிலையில் விரிசல் விழுந்துள்ள இந்த பாலத்தால் எதிர் வரும் ஆபத்தை பற்றி கவலைப் படாத நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சீர் செய்யவோ, மாற்று ஏற்பாடாக புதிய பாலம் கட்டவோ நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாய் இருந்து வருகின்றனர்." வலுவிழந்த பாலம், கனரக வாகனங்கள் செல்ல வேண்டாம், வாகனங்கள் மெதுவாக செல்லவும்' என்ற எச்சரிக்கை பெயர் பலகையை மட்டும் ஒப் புக்காக வைத்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior