உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 19, 2010

மேற்கு வங்க மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதல்: 60 பேர் பலி; 90 பேர் காயம்

               மேற்கு வங்க மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதிய விபத்தில் 60 பேர் பலியாகினர்; 90க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பிர்பூம் மாவட்டம் சைந்தியா ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 1.54 மணிக்கு இந்த விபத்து நடந்தது. கோச்பெகாரிலிருந்து சியல்டா நோக்கிச் சென்று கொண்டிருந்த உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில், சிவப்பு சிக்னலை தவறாகக் கடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 
               அந்த நேரத்தில் பாகல்பூலிருந்து ராஞ்சி நோக்கிச் செல்வதற்காக வனாஞ்சல் எக்பிரஸ் பிளாட்பாரம் 4-ல் இருந்து கிளம்பியது. இரு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறத்தில் உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் பலமாக மோதியது.இதில் வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின்  இரு பொதுப் பெட்டிகள் உள்ளிட்ட 5 பெட்டிகள் உருக்குலைந்தன. ரயில் நிலைத்தின் நடை மேம்பாலத்துக்கு மேல் பெட்டிகள் கிடப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் டிரைவர், உதவி டிரைவர், வனாஞ்சல் எக்ஸ்பிரஸின் கார்டு ஆகியோரும் இந்த விபத்தில் பலியாகினர். 
ஹெல்ப் லைன் தொலைபேசி எண்கள்: 
                 கிழக்கு ரயில்வே சிறப்பு கட்டுப்பாட்டு அறைசியல்டா- 033-23503535, 033-23503537மால்டா 06436-222061 பாகல்பூர் 06412-4222433ஜமால்பூர் 063444-3101

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior