உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 19, 2010

கடலூர் சிட்கோ பகுதியில் பெண்களிடம் கேலி

கடலூர் : 

              செம்மண்டலம் சிட்கோ பகுதியில் கேலி செய்யும் "ரோமியோ' க்களால் பணிக்கு செல்லும் பெண்கள் கவலையடைந்துள்ளனர்.

                கடலூர் செம்மண்டலத்தை அடுத்து சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இப்பகுதியில் பல்வேறு வகையான தொழிற் கூடங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல கம்பெனிகளில் அதிகளவில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள போக்குவரத்து இல்லா சாலைகளில் லாரி போன்ற மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காலை நேரத்தில் அவ்வழியாக பணிக்கு செல்லும் பெண்களை, லாரி மற்றும் வாடகைக்கு செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள மறைவில் நின்று கொண்டு சிலர் கேலி செய்து வருகின்றனர். இதனால் பணிக்கு செல்லும் பெண்கள் வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior