உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 19, 2010

கடலூர் மாவட்டத்தில் போலீஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு எஸ்.பி., பாராட்டு சான்று

கடலூர் : 

           போலீஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 13 பேருக்கு எஸ்.பி., பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

           மாவட்ட போலீஸ் துறையில் பணியாற்றிய 4 சப் இன்ஸ்பெக்டர்கள், மூன்று சிறப்பு சப் இன்ஸ் பெக்டர்கள் 5 ஏட்டுகள், இளநிலை உதவியாளர் ஒருவர் என மொத்தம் 13 பேர் கடந்த மாதம் 30ம் தேதி ஓய்வு பெற்றனர்.இவர்களுக்கு சேர வேண்டிய சேம நலநிதி, பணிக்கொடை நிதி, ஈட்டிய மற்றும் மருத்துவ விடுப்பு ஒப்படைப்பு நிதி உள்ளிட்ட அனைத்து பணப் பலன்களையும் விரைந்து வழங்க எஸ்.பி., உத்தரவிட்டார். அதன்படி 13 பேருக்கும் சேர வேண்டிய பணப் பயன்களை தயார் செய்யப் பட்டது. அதனையொட்டி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்த பாராட்டு விழாவில் பணி ஓய்வு பெற்ற 13 பேரின் பணியை பாராட்டி எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior