உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 19, 2010

சிதம்பரம் மேல வீதியில் பொதுக் கூட்டத்திற்கு தடை: அனைத்து கட்சியினர் கடும் எதிர்ப்பு

சிதம்பரம் : 

            சிதம்பரம் மேலவீதியில் பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு அனைத்து கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

            சிதம்பரம் கீழ வீதியில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதால் பொதுமக்களுக்கு கடுமையான இடையூறு ஏற்படுகிறது என கூட்டம் நடத்த கோர்ட் மூலம் தடை உத்தரவு பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேலவீதி பெரியார் சிலை அருகில் பொதுக் கூட்டம் நடந்தது. அந்த இடத்திலும், பொதுமக்களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது தடை விதிக்க வேண்டும் என மேல வீதி, வடக்கு வீதி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

              கோர்ட் தீர்ப்பின்படி கடந்த மே மாதம் 11ம்தேதி முதல் பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது.இது தொடர்பாக அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்ற கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. தாசில் தார் காமராஜ், டி.எஸ்.பி., மூவேந்தன் முன்னிலையில் நடந்த கூட்டத்தல் அ.தி.மு.க., நகர அவைத் தலைவர் ஏசுராஜ், மா.கம்யூ., நகர செயலாளர் ராமச்சந்திரன், வர்த்தக சங்கத் துணைத்தலைவர் சந்திரசேகரன், பா.ம.க., நகர செயலாளர் முத்துக்குமார், பா.ஜ., மாவட்ட செயலாளர் பால ரவி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் தாஜ்தீன், தே.மு.தி.க., மாவட்ட துணை செயலாளர் பாலு, மூ.மு.க., செயலாளர் செல்வராஜ், த.மு.மு.க., நகர செயலாளர் ஜாகிர் உசேன், இந்திய கம்யூ., நகர செயலாளர் சேகர், மூப்பனார் பேரவை காங்., மக்கின், தமிழ் தேசிய காங்., லோகநாதன் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தில், அனைத்து கட்சி பிரமுகர்கள், மேல வீதியில் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், மீண்டும் அதே இடத்தில் நடத்த அனுமதிக்க கோரிக்கை வைத்தனர். அதையடுத்து, கட்சியினர் விரும்பினால் மேல் முறையீடு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior