உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 19, 2010

கும்பகோணம் தீ விபத்தில் இறந்த மாணவர்களுக்கு கடலூரில் நினைவஞ்சலி

கடலூர்:

            கும்பகோணம் தீ விபத்தில் இறந்த மாணவர்களுக்கு 6-ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கடலூர் பெரியார் சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கடலூர் மாணவர்கள் பொது நல சேவை மையம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கடலூர் நகராட்சித் துணைத் தலைவர் தாமரைச் செல்வன் தலைமை தாங்கி மாணவர்களின் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பொது நல சேவை மையத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் அ.ராஜா, ஆர்.வினோத் ஆகியோர் செய்து இருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior