உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 11, 2010

நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் திட்டக்குடியில் 210 பேர் விண்ணப்பித்தனர்

திட்டக்குடி :

                      திட்டக்குடியில் அமைப் புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் 210 பேர் உறுப்பினர்களாக விண்ணப்பித்தனர்.

                 திட்டக்குடி செங்குந்தர் மண்டபத்தில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நேற்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடந்தது.  நலவாரிய அலுவலர்கள் ஜெரால்டு, ராதா, வி.ஏ.ஓ., பிச்சைப் பிள்ளை உள்ளிட்டோர் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட கண்காணிப்பாளர் ராதா முகாமிற்கு தலைமை தாங்கி, பயனாளிகளிடம் விண் ணப்பங்களை பெற்றார். இதில் உடலுழைப்பு, கட் டுமானம், தையல், கை வினை, பொற் கொல் லர், விசைத்தறி, சலவை உள் ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் 210 பேர் உறுப்பினர்களாக விண் ணப்பம் வழங்கினர். முகாமில் தி.மு.க., நகர செயலாளர் பரமகுரு, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் தங்கராசு, வி.ஏ.ஓ., பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior