உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 11, 2010

வேளாண் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

கடலூர் :

                     தேசிய வேளாண்  காப் பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் உணவுப்பயிர்கள் நெல், கேழ்வரகு, சோளம், பருத்தி, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் காப்பீடு செய்யப் படுகின்றன. இயற்கைச் சீற்றங்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் மகசூல் இழப்புகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

                    குத்தகைதாரர்கள், வங் கிக்கடன் பெறுவோர் மற் றும் கடன் பெறாதோர் உட் பட அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். சராசரி மகசூலின் 150 சதவீதம் மதிப்பு வரை காப்பீடு செய்யலாம். இதில் பெரும் பங்காக விவசாயத்துறை பயிர்கடன் பெறா விவசாயிகளை கூட்டி அவர்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்தி விவசாயிகள் அவரவர் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கியிலேயே சேர்க்கப்
படுகின்றனர்.

                ஒவ்வொரு தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரத்திலும் மாநில அரசின் விவசாயத்துறையினரால் பயிர் அறுவடை காலத்தில் பதினாறு, பத்து பயிர் அறுவடை சோதனைகள் நடத்தப்பட்டு நடப்பு பருவத்தில் சராசரி மகசூலை ஒப்பிடும்போது நடப்பு பருவத்தின் மகசூல் எவ்வளவு குறைந்திருக்கிறதோ அந்த விகிதப்படி  அவரவர் காப்பீடு செய்த தொகைக்கு ஏற்ப நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு மண்டல மேலாளர் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட், தம்புச்செட்டித் தெரு, பாரிமுனை, சென்னை என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior