உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 11, 2010

பல்வேறு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

கடலூர் :

                 கடலூர் வள்ளியம்மை மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

                   கடலூர் வள்ளியம்மை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நிறுவனர் நாளை முன்னிட்டு  பள்ளிகளுக்கிடையேயான ஓவியம், வர்ணம் தீட்டுதல், கைவினை பொருட்கள் செய்தல், வாய்ப்பாட்டு, மாறுவேடம், விளம்பரம் செய்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.  அதில் சிதம்பரம் எடிசன் ஜி.அகோரம், கடலூர் தி பெஸ்ட் ஸ்கூல், சி.கே., பள்ளி, லட்சுமி சோரடியா, நியூ மில்லேனியம், பண்ருட்டி ஜான்டூவி பள்ளிகளைச் சேர்ந்த 122 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி அறக்கட்டளை தலைவர் பாலு பரிசு வழங்கினார். விழாவில் தாளாளர் வைரம் துரைசாமி, அர்ஜூன், ஒருங்கிணைப்பாளர் ஆதித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior