உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 11, 2010

பள்ளியில் முப்பெரும் விழா

கிள்ளை :

               சிதம்பரம் அடுத்த கொடிப்பள்ளம் அரசு உயர் நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் மனோன்மணி தலைமை தாங்கினார். ஆசிரியர் தமிழ்ச் செல்வன் வரவேற்றார். திருஞானகுமார், மனோகரன், ரவிச் சந்திரன் முன்னிலை வகித்தனர்.  பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தாஜூதீன் மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடிகளை வழங்கினார். சமூக சேவகர் முகமது அயூப் சாலை பாதுகாப்பு விழிப் புணர்வு ஊர்வலத்தை  துவக்கி வைத்தார்.  ஊர்வலத்தில் மாணவர்கள் சாலை விதிகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினர். ஆசிரியர்கள் செந்தமிழ்ச் செல்வி, நிர்மலா, கே. நிர்மலா பங்கேற்றனர். சமூக சேவை மற்றும் கல்வி சேவைக்கு அம் பேத்கர் விருது பெற்ற  ஆசிரியர் ரவிச்சந்திரனை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior