உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 11, 2010

நூலகத்துறை சார்பில் பேச்சு, கட்டுரை போட்டி

விருத்தாசலம் :

              விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே நூலகத்துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

               விருத்தாசலம் கிளை நூலகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இடையே "நமது உலகம் நூலகம்' எனும் தலைப் பில் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப் பட்டது.  கம்மாபுரம், மங்கலம்பேட்டை, நெய்வேலி, முகாசபரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பேச்சு போட்டியில் டேனிஷ் மிஷன் பள்ளி மாணவன் செல்வமணி முதலிடமும், பாத் திமா பள்ளி மாணவர் அருண்  2 ம் இடமும் பெற்றனர். கட்டுரை போட்டியில் நெய்வேலி என்.எல்.சி., பள்ளி மாணவி மஞ்சுளா முதலிடமும், அபிராமி  2 ம் இடமும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சித்தார்த்தன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். கிளை நூலகர் விஜயலட்சமி, ஆசிரியர்கள் தெய்வமணி, பக்கிரிசாமி, பூவராகசுவாமி, அண்ணாமலை, சம்பந்தம், நூலகர்கள் சண்முகம், பாலகிருஷ் ணன், மனோகரன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior