உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 11, 2010

அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் பதவிக்கு 5 பேர் மனு தாக்கல்

கடலூர் :

             அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்  (கிழக்கு) பதவிக்கு நேற்று பண்ருட்டியில் 5 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

                   கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான மனுத்தாக்கல் நேற்று பண்ருட்டி ஸ்ரீராம் மகாலில் நடந்தது. முன்னாள் அமைச்சர் வளர்மதி, சைதை செல்வம் தேர்தல் அதிகாரிகளாக பங்கேற்றனர். அவர்களிடம் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., நிர்வாகிகள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

                  கடலூர் மாவட்ட செயலாளர்( கிழக்கு) பதவிக்கு தற்போதைய மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத், முன்னாள் மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட பேரவை செயலாளர் பன்னீர்செல்வம் உட்பட 5 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதேப் போல பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பலர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior