உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 11, 2010

கடலூர் முதுநகரில் போக்குவரத்து நெரிசல் போலீசார் அதிரடி நடவடிக்கை

கடலூர் :

               கடலூர் முதுநகரில் மீன் மார்க்கெட் அருகே வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

          கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட் அருகே இருசக்கர வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதால் அப்பகுதியில் போக் குவரத்து நெரிசல் ஏற் பட்டு வந்தது. இதனால் மீன் மார்க்கெட் அருகே வாகனங்கள் நிறுத்த தடை செய்ய முடிவு செய்யப்பட் டது.

                             அதன்படி மீன் மார்க் கெட்டிற்கு வருபவர்களின் இருசக்கர வாகனங்களை மார்க்கெட்டிற்கு எதிரில் ரயில் நிலையத்திற்கு செல் லும் வழியில் கோவில் அருகே உள்ள இடத்தில் நிறுத்த போலீசார் ஏற்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி., ஸ்டாலின் மற்றும் அதிரடிப்படை போலீசார் நேற்று முதுநகரில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மீன் மார்க்கெட் பகுதியில் நிறுத்தியிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தியதோடு, வாகனங்களை கோவில் அருகில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டனர். அப்பகுதியில் பிளாட் பாரத்தை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண் டும் என்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior